Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб குறை தீர்க்கும் குன்றக்குடிப் பதிகம் - Kurai Theerkum Kundrakudi Padhigam (Lyrics in Comments) в хорошем качестве

குறை தீர்க்கும் குன்றக்குடிப் பதிகம் - Kurai Theerkum Kundrakudi Padhigam (Lyrics in Comments) 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



குறை தீர்க்கும் குன்றக்குடிப் பதிகம் - Kurai Theerkum Kundrakudi Padhigam (Lyrics in Comments)

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது குன்றக்குடி. முன்னொரு காலத்தில் அரசவனம் என்று போற்றப்பட்ட இந்தத் தலம், பின்னாளில் குன்றக்குடி என்று அழைக்கப்படுகிறது.இந்த குன்றக்குடிக்கு மயூரகிரி என்றும் திருநாமம் உண்டு.கிரி என்றால் மலை. மயூரி என்றால் மயில். முருகப்பெருமானின் வாகனமான மயில்,அவரின் சாபத்தால் மலையாகிப்போனதாக சொல்கிறது ஒரு புராண செய்தி. ஒரு முறை அசுரர்கள், முருகப்பெருமானின் மயிலிடம், “நான்முகனின் வாகனமான அன்னமும், திருமாலின் வாகனமான கருடனும் நாங்கள்தான் மயிலை விட சக்தி படைத்தவர்கள்,மேலும் வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று கூறுகின்றன” என்று பொய் கூறினர். இதை உண்மை என்று நம்பிய மயிலும், கோபம் கொண்டு பிரம்மாண்ட உருவம் எடுத்து, கருடனையும், அன்னத்தையும் விழுங்கிவிட்டது. பிரம்மனும், திருமாலும், முருகப்பெருமானிடம் இது குறித்து முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற முருகப்பெருமானும், மயிலிடம் இருந்து அன்னத்தையும், கருடனையும் மீட்டுக் கொடுத்தார். மேலும் மயிலின் கர்வத்தினை அடக்க மயிலை, மலையாக மாறிப்போகும்படி சாபமிட்டார். தன் தவறுக்கு வருந்திய மயிலும் குன்றக்குடி வந்து மலையாகிப்போனது. ஆறுமுகப் பெருமானைக் குறித்து மலையாக இருந்த படியே தவம் இருந்தது.மயிலின் தூய்மையான தவத்தில் மகிழ்ந்த முருகப்பெருமானும் , மயிலுக்கு சாபவிமோசனம் அளித்தார். மயில் உருவத்தில் இருந்த அந்த மலை மீதே எழுந்தருளி அருள்புரிந்தார் என்கிறது இத்திருக்கோயிலின் தல வரலாறு. இங்கு வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப்பெருமான், மயில் வாகனத்தில் வீற்றிருக்கின்றார். மருதுபாண்டியருள் மூத்தவரான பெரிய மருதுவுக்கு முதுகில் ஏற்பட்டிருந்த கட்டியை, வைத்தியர்களால் தீர்க்க முடியாது என்று கைவிரித்த போது, இம்முருகப்பெருமான் அருளால், அது குணமடைந்தது.அம்மருது சகோதரர்களால் திருப்பணிகள் பல செய்யப்பட்டன. அருணகிரிநாதர் இந்த முருகக் கடவுளை திருப்புகழ் பாடியிருக்கிறார். பாம்பன் குமரகுருதாஸ சுவாமிகளும் இத் தலத்து இறைவனைப் பாடியுள்ளார். சூரியன், நாரதர், விஸ்வாமித்திரர், வசிஷ்டர், கருடன், இந்திரன், மன்மதன் முதலானோர் இங்கு வந்து தவமிருந்து வரம் பெற்றனர் என்கிறது தல புராணம். இவ்வாறாக மேலும் பல சிறப்புகளையுடைய சண்முகநாதப் பெருமானின் திருவருளை வேண்டி, இந்த குன்றக்குடி பதிகத்தை நாமும் கேட்டு/பாடி மகிழ்வாேம். அன்புடன், நிறை இசைக் குடம் Singer : Akila Natesan Editor : Bharane Chidambaram Description : Mani Venkatachalam Vani Palaniappan Due to space constraint, Lyrics is given in the comment section. Please check comment section below.

Comments