У нас вы можете посмотреть бесплатно சுகப்பிரசவம் ஆக பதிகம் | நன்றுடையானை பதிகம் | திருச்சிராப்பள்ளி பதிகம் | Nandrudaiyanai или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
Suga Prasavam Pathigam, நன்றுடையானை பதிகம், Tiruchirappalli Pathigam, Nandrudaiyanai, சுகப்பிரசவம் ஆக பதிகம், நன்றுடையானை தீயது இலானை , திருச்சிராப்பள்ளி பதிகம், நன்றுடையானைத் தீயதிலானை விளக்கம், சுகப்பிரசவம் ஆக மந்திரம், சுகப்பிரசவம் பதிகம், நன்று உடையானை. முதல் திருமுறை பதிகம் : 98 அருளியவர் : திருஞானசம்பந்தர் பண் : குறிஞ்சி நாடு : சோழநாடு காவிரித் தென்கரை தலம் : சிராப்பள்ளி பாடியவர் : திருவிடை மருதூர் S.சம்பந்த தேசிகர் எல்லா உயிர்க்கும் தந்தையாகவுள்ள இறைவன் ஒரு பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவி செய்தமையால் தாயுமானவர் (தாயும் ஆனவர்) என்று பெயர் பெற்றார். தனகுத்தன் என்ற வணிகன் இவ்வூரில் வசித்தான். கர்ப்பிணியான அவனது மனைவி, உதவிக்கு தாயை அழைத்திருந்தாள். தாயும் அவளது வீட்டிற்கு கிளம்பி வந்தாள். வழியில் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவளால் வீட்டிற்கு வரமுடிய வில்லை. இதனிடையே, அவளுக்கு பிரசவ வலி உண்டானது. தன் இஷ்ட தெய்வமான தாயுமானவரை மனம் உருக வேண்டினாள் ரத்னாவதி. அவளது தாய் உருவத்திலேயே ஓடோடி வந்தார் இறைவன். பரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு சுகப்பிரசவம் பார்த்தார். காவிரியில் ஒரு வாரம் வரையில் வெள்ளம் ஓடவே, அதுவரையில் சிவன், தாயின் இடத்திலிருந்து அப்பெண்ணிற்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தார். வெள்ளம் வடிந்தபிறகு, ரத்னாவதியின் தாய் வீட்டிற்கு வந்தாள். அவளது வடிவில் மற்றொருவள் இருந்ததைக் கண்ட, இருவரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது சிவன் இருவருக்கும் சுயவடிவில் காட்சி கொடுத்தருளினார். தாயாக இருந்து அருளியதால் இவர்,"தாயுமானவர்' என்று பெயர் பெற்றார். இதன் காரணமாக, இத்தலத்து இறைவனை கர்ப்பிணிப் பெண்கள் வழிபட்டால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை. கர்ப்பிணிப் பெண்கள் இத்தலத்து இறைவனை வழிபட்டு, திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற இந்த திருப்பதிகத்தை தினமும் இரண்டு வேளையும் பாடினாலோ /கேட்டாலோ சுகப்பிரசவம் இனிதே நடைபெறும். திருச்சிற்றம்பலம் பாடல் : 1 நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச் சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூறஎன்னுள்ளங் குளிரும்மே. பாடல் : 2 கைம்மகஏந்திக் கடுவனொடூடிக் கழைபாய்வான் செம்முகமந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி வெம்முகவேழத் தீருரிபோர்த்த விகிர்தாநீ பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழியன்றே. பாடல் : 3 மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல் செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச் சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும் எந்தம்மடிகள் அடியார்க்கல்லல் இல்லையே. பாடல் : 4 துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் திடைவைகிச் சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக் கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம் பிறைமல்குசென்னி யுடையவன்எங்கள் பெருமானே. பாடல் : 5 கொலைவரையாத கொள்கையர்தங்கள் மதில்மூன்றும் சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித் தலைவரைநாளுந் தலைவரல்லாமை யுரைப்பீர்காள் நிலவரைநீல முண்டதும்வெள்ளை நிறமாமே. பாடல் : 6 வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார் தையலொர்பாகம் மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில் ஐயமுங்கொள்வர் ஆரிவர்செய்கை அறிவாரே. பாடல் : 7 வேயுயர்சாரல் கருவிரலூகம் விளையாடும் சேயுயர்கோயிற் சிராப்பள்ளிமேய செல்வனார் பேயுயர்கொள்ளி கைவிளக்காகப் பெருமானார் தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே. பாடல் : 8 மலைமல்குதோளன் வலிகெடவூன்றி மலரோன்றன் தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் பழியோரார் சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால் சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே. பாடல் : 9 அரப்பள்ளியானும் மலருறைவானும் அறியாமைக் கரப்புள்ளிநாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும் இரப்புள்ளீரும்மை யேதிலர்கண்டால் இகழாரே. பாடல் : 10 நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை ஊணாப்பகலுண் டோதுவோர்கள் உரைக்குஞ்சொல் பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார் சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே. பாடல் : 11 தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த கானல்சங்கேறுங் கழுமலவூரிற் கவுணியன் ஞானசம்பந்தன் நலம்மிகுபாடல் இவைவல்லார் வானசம்பந்தத் தவரொடுமன்னி வாழ்வாரே. திருச்சிற்றம்பலம். #aalayamselveer #tiruchirappallipathigam #nandrudaiyanai #panniruthirumurai #pathigam #thirugnanasambandar #thirugnanasambantharpathigam #thevaram #thevaramsongsintamil #thevarampadalkal #thevaramsong