Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Avvinaikku Ivvinai | அவ்வினைக்கு இவ்வினை | திருநீலகண்ட திருப்பதிகம் | Thiruneelakanda Pathigam в хорошем качестве

Avvinaikku Ivvinai | அவ்வினைக்கு இவ்வினை | திருநீலகண்ட திருப்பதிகம் | Thiruneelakanda Pathigam 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Avvinaikku Ivvinai | அவ்வினைக்கு இவ்வினை | திருநீலகண்ட திருப்பதிகம் | Thiruneelakanda Pathigam

Avvinaikku Ivvinai - Thiruneelakanda Pathigam - Thiruneelakanda Pathigam in Tamil - Thiruneelakanda Pathigam Lyrics in Tamil - Avvinaikku Meaning in Tamil அவ்வினைக்கு இவ்வினை - அவ்வினைக்கு இவ்வினை பதிகம் - அவ்வினைக்கு இவ்வினை ஆம் - அவ்வினைக்கு இவ்வினையாம் - அவ்வினைக் கிவ்வினை - அவ்வினைக் கிவ்வினை யாமென்று விஷ ஜுரத்தை விரட்டும் திருநீலகண்ட திருப்பதிகம் - நோய் தீர்க்கும் பதிகம் முதல் திருமுறை - 1.116.1 - 1.116.11 அ௫ளியவர் : திருஞானசம்பந்தர் திருமுறை : முதல் திருமுறை பண் : வியாழக்குறிஞ்சி நாடு : பொது தலம் : பொது சிறப்பு: திருநீலகண்டம் பாடியவர் : திருவிடை மருதூர் S.சம்பந்த தேசிகர் பாடல் எண் : 1 அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர் உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ் செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். பாடல் எண் : 2 காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால் ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும் பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம் தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். பாடல் எண் : 3 முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம் விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர் இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர் சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். பாடல் எண் : 4 விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும் புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம் திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். பாடல் எண் : 5 மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர் கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம் செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். பாடல் எண் : 6 மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப் பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம் பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம் சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். பாடல் எண் : 7 இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. பாடல் எண் : 8 கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம் செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். பாடல் எண் : 9 நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து தோற்ற முடைய அடியும் முடியுந் தொடர்வரியீர் தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம் சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். பாடல் எண் : 10 சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும் பாக்கிய மின்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார் பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம் தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். பாடல் எண் : 11 பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான் இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண் திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார் நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே. #aalayamselveer #thiruneelakandapathigam #avvinaikkuivvinai #panniruthirumurai #pathigam #thirugnanasambandar #thirugnanasambantharpathigam #thevaram #thevaramsongsintamil #thevarampadalkal #thevaramsong

Comments