У нас вы можете посмотреть бесплатно ஸ்ரீ கோட்டையம்மன் துதி --- Shree Kottaiamman Thudhi (LYRICS IN COMMENTS) или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
To get updates on Nirai Isai Kudam Songs and Song Lyrics, please join our telegram group by clicking the link - https://t.me/joinchat/Iq7mbbjfKbkc1jYn தேவகோட்டை கோட்டைநாச்சியம்மன், இரு கோவில்களைக்கொண்டு நாடு காக்கும் எல்லை அம்மன். ஆலயத்தில் உருவமுடன் அழகாய் காட்சி தருவாள். ஆடி மாதம் முதல் திங்களன்று மேடை என்னும் கோவிலில் குடியேறுவாள். இரு திங்கள் மேடையிலே இன்பமாய் கொலுவிருந்து, கோலாகலமாய் திருவிழா கொண்டாடுவாள். திருவிழா மேடையிலே வீற்றிருக்கும் ஆத்தாளுக்கு உருவமில்லை, ஆதலால் குடத்தில் தென்னைமரப் பாளைவைத்து, அழகு உருவம் செய்து மேடையின் கற்பகிரஹத்தில் வைத்திடுவார். மேடையிலே இருக்கும் பீடத்திற்கு அபிஷேகம் செய்திடுவார். எத்தனை கண்கொள்ளா அலங்காரங்கள், பழஅலங்காரம், காய்கறி அலங்காரம், வளையல் அலங்காரம், கழுதூறு சாத்தும் அலங்காரம், போன்ற அழகு அலங்காரங்களை செய்திடுவார். ஆடி வெள்ளி அன்று பால்குடம் எடுத்து பூச்சொரிந்து பூஜை செய்வார் பூவை மனம் மகிழவே. பதினைந்து நாள் நடக்கும் திருவிழாவில் மூன்று பொங்கல் வைத்து, ஒன்பதாம் நாளன்று அன்னை கண் திறக்கும் போது இளநீர் கண்திறந்து, மாவிளக்கு வைத்து, பானக்கம் கரைத்து படையல் இடுவார். குழந்தைகளுக்கு தொட்டில் கட்டி கோவிலை சுற்றி பிரகாரம் செய்து, முடி இறக்கி வேண்டுதலை செலுத்துவார். உருவாராம் உண்டியலில் போட்டு நோய் அகற்றி நல்ல உடலாரோக்கியதை வேண்டுவார். முன்றாம் திங்களன்று கரகமாய் இருக்கும் கோட்டை ஆத்தாளை அருகிருக்கும் ஊரணியில் நீரில் வைத்து அவள் மனம் குளிர மறுபடியும் ஆலயம் அனுப்பி வைப்பார். ஆயிரக்கணக்கானோர் அயல் நாடுகளில் இருந்தும் அன்னையை தரிசிக்க ஆடியில் வருவார்கள். ஆனால் இந்த வருடம் அவள் அருகில் இருப்பவர்களுக்குக்கூட அவளை தரிசிக்க இயலவில்லை. ஆதலால் அன்னையின் பாடல்களை கேட்டு, நிகழ் நிலையில் வரும் நேரடி ஒளிபரப்பை கண்டு மகிழ்வோம் . இந்த பாடலின் மூலம் அனைத்து நோய்களையும் அழித்து, உலகத்தைக் காக்க ஆத்தாளின் அருளை வேண்டுவோம். அடுத்த ஆடியில் அவள் முகம் காண ஆவலாய் காத்திருப்போம். Singer : Akila Natesan Poet : Devakottai M. Rajendiran Editor : Bharane Chidambaram Description : Vishalakshi Meyyappan Song Lyrics given in the public comments section considering the length of the lyrics.