У нас вы можете посмотреть бесплатно "VALAINDHATHU VILLU"("வளைந்தது வில்லு")~THIRUVUNDHIYAAR -THIRUVASAKAM~SUNG BY SRI Pa.SARGURUNATHAN. или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
எட்டாம் திருமுறை. ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய 'திருவாசகம்'. 014 - திருவுந்தியார் (தில்லையில் அருளியது.) சிறப்பு : 'ஞான வெற்றி. உந்தி என்பது மகளிர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று. சிறுமியர்கள் கீழே குத்துக்கால் இட்டு அமர்ந்தும், திடீரென்று பறவை போல் கைகளை விரித்துக்கொண்டு எழுந்து ஓடிச்சென்று, மறுபடியும் தங்களது கைகளை மடக்கிக்கொண்டு அமர்ந்தும், இவ்வாறு மீண்டும் மீண்டும் அமர்ந்தும் எழுந்தும் தொடர்ந்து விளையாடுவதை உந்தீ விளையாட்டு என்று கூறுவார்கள். மணிவாசக அடிகளார் மகளிரை முன்னிலைப்படுத்தி பாடிய பாடல்களின் வரிசையில் இந்த பாடலையும் வைத்துள்ளார். அமர்ந்த நிலையிலிருந்து எழுந்து குதித்து மீண்டும் அமரும் நிலைக்கு ஏற்றவாறு இந்த பாடல்கள் அமைந்துள்ளன.வளைந்தது வில்லு என்ற போது அமர்ந்தவர்கள் எழுவதும் விளைந்தது பூசல் என்ற போது கைகளை விரித்து குதிப்பதும், உளைந்தன முப்புரம் என்ற போது விரித்த கைகளை சிறகு போன்று அசைப்பதும் ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற என்ற போது அமர்வதும் ஆக செயல்கள் அமையும் வண்ணம் இயற்றப்பட்ட பாடல்கள். இந்த பதிகத்தின் பாடல்களில் பெரும்பாலும் பெருமானின் வீரச்செயல்கள் குறிப்பிடப் படுகின்றன. இசையின்பத்தின் பொருட்டு 'உந்தி' என்பது 'உந்தீ' என நீண்டது. ஞான வெற்றி திருவருள் வெற்றி என்பதாம்; தனக்கு மாறாகச் செய்யும் செயலை ஒறுத்து அடக்கித் தன்வழிப்படுத்தியதே திருவருள் வெற்றி. திருச்சிற்றம்பலம். வளைந்தது வில்லு விளைந்தது பூசல் உளைந்தன முப்புரம் உந்தீபற ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற. 1. ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில் ஓரம்பே முப்புரம் உந்தீபற ஒன்றும் பெருமிகை உந்தீபற. 2. தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும் அச்சு முறிந்ததென் றுந்தீபற அழிந்தன முப்புரம் உந்தீபற. 3. உய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண்டு எய்யவல் லானுக்கே உந்தீபற இளமுலை பங்கனென் றுந்தீபற. 4. சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள் ஓடிய வாபாடி உந்தீபற உருத்திர நாதனுக் குந்தீபற. 5. ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று சாவா திருந்தானென் றுந்தீபற சதுர்முகன் தாதையென் றுந்தீபற. 6. வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய கையைத் தறித்தானென் றுந்தீபற கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 7. பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப் பார்ப்பதென் னேஏடி யுந்தீபற பணைமுலை பாகனுக் குந்தீபற. 8. புரந்தர னாரொரு பூங்குயி லாகி மரந்தனி லேறினார் உந்தீபற வானவர் கோனென்றே உந்தீபற. 9. வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை துஞ்சின வாபாடி உந்தீபற தொடர்ந்த பிறப்பற உந்தீபற. 10. ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக் கூட்டிய வாபாடி உந்தீபற கொங்கை குலுங்கநின் றுந்தீபற. 11. உண்ணப் புகுந்த பகனொளித் தோடாமே கண்ணைப் பறித்தவா றுந்தீபற கருக்கெட நாமெலாம் உந்தீபற. 12. நாமகள்நாசி சிரம்பிர மன்படச் சோமன் முகன்னெரித் துந்தீபற தொல்லை வினைகெட உந்தீபற. 13. நான்மறை யோனு மகத்திய மான்படப் போம்வழி தேடுமா றுந்தீபற புரந்தரன் வேள்வியில் உந்தீபற. 14. சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை வாரி நெரித்தவா றுந்தீபற மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 15. தக்கனார் அன்றே தலையிழந் தார்தக்கன் மக்களைச் சூழநின் றுந்தீபற மடிந்தது வேள்வியென் றுந்தீபற. 16. பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட கோலச் சடையற்கே யுந்தீபற குமரன்தன் தாதைக்கே உந்தீபற. 17. நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை ஒல்லை யரிந்ததென் றுந்தீபற உகிரால் அரிந்ததென் றுந்தீபற. 18. தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம் ஈரைந்தும் இற்றவா றுந்தீபற இருபதும் இற்றதென் றுந்தீபற. 19. ஏகாச மிட்ட இருடிகள் போகாமல் ஆகாசங் காவலென் றுந்தீபற அதற் கப்பாலுங் காவலென் றுந்தீபற. 20. திருச்சிற்றம்பலம்.