У нас вы можете посмотреть бесплатно ஜேஎம்எம் கூட்டணி அரசை விளாசிய மோடி Modi at Jharkhand| BJP| JMM - Congress - RJD| Bangladesh Infiltr или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
#Partnership ஜார்கண்டை ஆளும் ஜேஎம்எம் முந்தைய ஜேஎம்எம் கிடையாது. அதன் நிறம் மாறியுள்ளது. ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தோளோடு தோள் தந்து அந்த கட்சியை தாங்குகின்றன. இந்த கூட்டணி ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. கூட்டு சேர்ந்து கொள்ளையடிப்பதில் மட்டுமே இவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். நிலம், நீர், காடு என அனைத்திலும் சுரண்டுகின்றனர். ஊழல் கரைபுரண்டு ஓடுகிறது. அரசு பணி நியமனம், பணி இடமாறுதல் உள்ளிட்டவற்றில் மிகப் பெரிய ஊழல் நடக்கிறது. இவர்கள் ஜார்கண்ட் மக்களின் நலனுக்காக உழைப்பதில்லை. மாறாக தங்கள் சொந்த லாபத்திற்காக ஓடி ஓடி ஊழல் செய்கின்றனர். மக்கள் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களை எல்லாம் மாநிலத்தை ஆளும் ஜேஎம்எம் கூட்டணி அரசு நிறைவேற்றவிடாமல் தடுக்கிறது. பழங்குடியின மக்களின் நலன் கருதி வாஜ்பாய் ஆட்சி காலத்தில் ஜார்கண்ட் புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. ஆனால், ஆர்ஜேடி, காங்கிரஸ் போன்ற கட்சிகள் பழங்குடியின மக்களின் நலனை மண்ணில் புதைத்தனர். வங்கதேசத்தினர் ஊடுருவலால் மாநிலத்தில் பழங்குடியினர் எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ளது. சந்தால் பராக்னா பகுதியில், பழங்குடியினர் வெகுவாக குறைந்துள்ளனர். அதற்கு மாறாக வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக இங்கு குடியேறியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்துக்கள், பழங்குடியினர் மக்கள் தொகை குறைந்ததை இங்குள்ள மக்கள் உணர்கின்றனர். இது குறித்து ஐகோர்ட் கேள்வி எழுப்புகிறது. ஆனால், மாநிலத்தை ஆளும் ஜேம்எம்எம் அரசின் கண்களுக்கு மட்டும் இது தெரியவில்லை. கோர்ட் கூறுவதை கூட அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். வங்கதேச வந்தேறிகளின் பார்வைக்கு பழங்குடியின பெண்கள் தப்புவதில்லை. நாளுக்கு நாள் இந்த பகுதியில் வங்கதேசத்தினர் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஜார்கண்ட் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமென்றால், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும். பழங்குடியினர் நலன் காக்க இந்த மாற்றம் அவசியம் என பிரதமர் மோடி பேசினார்.# #ModiInJharkhand #BJPRally #JMMCongressRJD #BangladeshInfiltration #JharkhandPolitics