У нас вы можете посмотреть бесплатно 33 மணிச்செபமாலை | Rosary to Lord Jesus மிகவும் பழமையான ஜெபம் или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
33 மணிச் செபமாலை. சர்வத்துக்கும் வல்ல பிதாவாகிய சர்வேசுரா சுவாமி! நீச மனிதருமாய் நன்றியறியாத பாவிகளுமாயிருக்கிற அடியோர்கள், மட்டில்லாத மகிமை பிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய சந்நிதியிலேயிருந்து செபம் பண்ண பாத்திரமாகாதவர்களாய் இருந்தாலும் தேவரீருடைய அளவறுக்கப்படாத கிருபா கடாட்சத்தை நம்பிக் கொண்டு சேசுநாதருக்கு தோத்திரமாக முப்பத்து மூன்று மணிச் செபம் பண்ண ஆசையாயிருக்கிறோம். இந்த செபத்தை பக்தியோடே செய்து பராக்கில்லாமல் முடிக்கத் தேவரீருடைய ஒத்தாசை கட்டளை பண்ணியருளும் சுவாமி. நம்பிக்கை அறிக்கை விண்ணகத்தையும் மண்ணகத்தையும் ... மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனிதனும் ஒன்றாயிருக்கிற சேசுநாதர் சுவாமியுடைய மூன்று பிரதான மகிமைகளைக் குறித்து மூன்று புண்ணியங்களைக் கேட்கிறது. மெய்யான சர்வேசுரனாயிருக்கிற எங்களாண்டவரே! எங்களிடத்திலே தேவ விசுவாசமென்கிற புண்ணியமுண்டாகிப் பலன் அளிக்கும்படிக்கு அநுக்கிரகம் பண்ணியருளும். விண்ணுலகில் இருக்கிற மெய்யான மனிதராயிருக்கிற எங்களாண்டவரே! எங்களிடத்திலே தேவ நம்பிக்கையென்கிற புண்ணியமுண்டாகி வளரும்படிக்கு அநுக்கிரகம் பண்ணியருளும். 1 விண்ணுலகில் இருக்கிற மெய்யான இரட்சகராயிருக்கிற எங்களாண்டவரே! எங்களிடத்திலே தேவ சிநேகமென்கிற புண்ணியமுண்டாகி அதிகரிக்கும்படி அநுக்கிரகம் பண்ணியருளும். 1 விண்ணுலகில் இருக்கிற 1 தந்தைக்கும், மகனுக்கும், பரிசுத்த கன்னியாயிருக்கிற அர்ச். தேவமாதாவுக்கு கபிரியேலென்கிற சம்மனசானவர் மங்கள வார்த்தை சொன்ன அருள் நிறை மந்திரம் சொல்லுகிறது. 1 அருள் நிறைந்த மரியே 1-வது மன்றாட்டு: சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரா சுவாமி! தேவரீர் அருளிச் செய்த திவ்விய கற்பனைகளுக்கு விரோதமான குற்றங்களைச் செய்தோமே. அவர்களையெல்லாம் தேவரீர் பொறுத்துக்கொண்டு இனிமேல் அடியோர்கள் சுமுத்திரையாய் நடக்கவும், தேவரீருடைய தோத்திரம் விக்கினமின்றி எங்கும் பரம்பவும் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கிற ஆத்துமாக்கள் அவதியில் இளைப்பாற்றியடைந்து மோட்ச பாக்கியத்தை சுதந்தரித்துக் கொள்ளவும் கிருபை பண்ணியருளும் சுவாமி. 10 விண்ணுலகில் இருக்கிற 1 தந்தைக்கும், மகனுக்கும் பரலோகத்துக்கு இராக்கினியாயிருக்கிற அர்ச்சியஷ்ட தேவமாதாவே, பாவிகளாயிருக்கின்ற நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த பத்து மணி செபத்தையும் உம்முடைய தோத்திரங்களோடே ஒன்றாகக் கூட்டி உம்முடைய திருக்குமரன் சேசுநாதரின் திருப்பாத்திலே பாத காணிக்கையாக வைக்க உம்மை மன்றாடுகின்றோம். 1 அருள் நிறைந்த... 2-வது மன்றாட்டு: சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரா சுவாமி! நாங்கள் சுபாவமாய் மகா பலவீனருமாய் தந்திரங்களினால் இழுக்கப்பட்டவர்களுமாய் இருக்கிறப்படியினாலே உலகம், பசாசு, சரீரமாகிய ஞான சத்துருக்களை ஜெயித்து நாங்கள் பாவ வழி போகாமலும், பஞ்சேந்திரியங்களுடைய அலைக்கழிப்புக்கு இனங்காமலும் ஒறுத்தல் உபவாசத்தால் உமது வேத வழிபாட்டில் சுமுத்திரையாய் நடக்கவும் கிருபை பண்ணியருளும் சுவாமி. 10 விண்ணுலகில் இருக்கிற 1 தந்தைக்கும், மகனுக்கும். பூலோகத்துக்கு ஆண்டவளாய் இருக்கிற அர்ச்சியஷ்ட தேவமாதாவே, பாவிகளாயிருக்கின்ற நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த பத்து மணி செபத்தையும் உம்முடைய தோத்திரங்களோடே ஒன்றாகக் கூட்டி உம்முடைய திருக்குமரன் சேசுநாதரின் திருப்பாத்திலே பாத காணிக்கையாக வைக்க உம்மை மன்றாடுகின்றோம். 1 அருள் நிறைந்த... 3-வது மன்றாட்டு: சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரா சுவாமி! நாங்கள் பிரதான புண்ணியங்களாகிய விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகத்தில் உயரவும், இஸ்பிரீத்துசாந்துவின் ஞான ஒளி கொண்டு பேரின்பத்தின் பாதையை பிடிக்கவும் உலகத்தில் உத்யோகத் தொழில்களை செய்கையில் எங்கள் மனது உம்மையும் உம்முடைய நித்திய இராச்சியத்தையும் மாத்திரம் தாவி நிற்கவும் எல்லா கிரிகைகளையும் உமக்காகவே செய்யவும் கிருபை பண்ணியருளும் சுவாமி. 10 விண்ணுலகில் இருக்கிற 1 தந்தைக்கும், மகனுக்கும். விடியற்காலத்தின் நட்சத்திரமாய் இருக்கிற அர்ச்சியஷ்ட தேவமாதாவே, பாவிகளாயிருக்கின்ற நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த பத்து மணி செபத்தையும் உம்முடைய தோத்திரங்களோடே ஒன்றாகக் கூட்டி உம்முடைய திருக்குமரன் சேசுநாதரின் திருப்பாத்திலே பாத காணிக்கையாக வைக்க உம்மை மன்றாடுகின்றோம். 1 அருள் நிறைந்த... பிரார்த்திக்கக்கடவோம். அவதரித்த தேவனுமாய், கிருபை நிறைந்த கர்த்தருமாய், மதுரமுள்ள இரட்சகருமாயிருக்கிற அன்புக்குரிய சேசுவே! தேவரீர் இவ்வுலகத்தில் வாசம் பண்ணின முப்பத்து மூன்று வருஷ காலம் மனிதர்களுக்கு திவ்விய மாதிரிகையாக செய்து வந்த சுகிர்த புண்ணியங்களை அடியோர்கள் அநுசரிக்கவும், தேவரீர் எங்களை இரட்சிக்கத்தக்கதாக, உம்முடைய திரு இரத்தமெல்லாம் சிந்தி அடைந்த கடின மரணத்தின் பலனாலே நாங்கள் மோட்சத்தின் பேரின்ப பாக்கியத்தைப் பெற்று உம்மை என்றென்றைக்கும் தரிசித்துச் சிநேகித்து ஸ்துதிக்கவும் கிருபை செய்தருளும் சுவாமி! ஆமென். Join this channel to get access to perks: / @tamilbiblewisdom2022 Whatsapp Link- https://chat.whatsapp.com/IbVJKPG4YDY... Telegram Link - https://t.me/TamilBibleWisdom Youtube Link - / tamilbiblewisdom2022 Click on the above link and subscribe to Tamil Bible Wisdom Channel. #இறைவார்த்தை#TAMILBIBLEREADING2022#TamilBibleWisdom INSTAGRAM - / tamilbiblewisdom2022 FACEBOOK - https://www.facebook.com/profile.php?... SPOTIFY https://open.spotify.com/show/55Pq7fr...